தொடர்ந்து 3 மாதமாக ஜனவரியில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது…. ஹேப்பி மூடில் மத்திய அரசு…..

 

தொடர்ந்து 3 மாதமாக ஜனவரியில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது…. ஹேப்பி மூடில் மத்திய அரசு…..

தொடர்ந்து 3 மாதமாக கடந்த ஜனவரியிலும் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது. மேலும், வருவாய் பற்றாக்குறை நிலவும் சமயத்தில் ஜி.எஸ்.டி. வசூல் உயர்ந்துள்ளது மத்திய அரசுக்கு ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி அமைப்பு, வரி விகிதத்தை செயல்படுத்தும் நோக்கில் 2017 ஜூலை மாதத்தில் சரக்குகள் மற்றும் சேவைகள் (ஜி.எஸ்.டி.) வரியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஜி.எஸ்.டி. வரி நம் நாட்டுக்கு புதியது என்பதால் அதில் உள்ள இடர்பாடுகளை சரிசெய்வதற்காக மத்திய நிதியமைச்சர் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டது. அந்த கவுன்சில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சந்தித்து ஜி.எஸ்.டி.யில் உள்ள குறைபாடுகளை களைந்து வருகிறது.

ஜி.எஸ்.டி.

பொதுவாக ஜி.எஸ்.டி. வாயிலாக, மாதந்தோறும் சராசரியாக ரூ.1 லட்சம் கோடி வருவாய் அரசுக்கு வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான 3 மாத காலத்தில் மாதந்திர ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கும் குறைவாகவே இருந்தது. ஜி.எஸ்.டி. வருவாய் குறைந்தது மத்திய அரசுக்கு நிதிநெருக்கடியை உண்டாக்கியது.

ஜி.எஸ்.டி.

இந்த சூழ்நிலையில், கடந்த நவம்பர் மற்றும் டிசம்பரில்  ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து 3 மாதமாக கடந்த ஜனவரியில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. 2020 ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. நிதிப்பற்றாக்குறையால் தவிக்கும் மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி. வசூல் உயர்ந்துள்ளது பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது.