தொடர்ந்து லீக்காகும் தர்பார் புகைப்படங்கள்: பாவம் யா.. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்

 

தொடர்ந்து லீக்காகும் தர்பார் புகைப்படங்கள்: பாவம் யா.. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்

தர்பார் படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் மீண்டும் இணையத்தில் வெளியாகிப் படக்குழு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

சென்னை: தர்பார் படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் மீண்டும் இணையத்தில் வெளியாகிப் படக்குழு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாக்கி வரும் படம் ’தர்பார். ஐ.பி.எஸ். அதிகாரியாக ரஜினிகாந்த் நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். அவர்களுடன் யோகி பாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, ப்ரதீப் பாப்பர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நாள் முதல் படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகி படகுழுக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன. இதைப் கண்டு சிலர் படப்பிடிப்பு முடியும் முன்பே அனைத்துக் காட்சிகளும் சமூக வலைத்தளத்தில் வந்துவிடும் என்று மீம்ஸ் போட்டனர். இதனால் கடுப்பான இயக்குநர் படப்பிடிப்பிற்கு செல்போன் கொண்டு வர தடை விதித்தார். 

darbar

இந்த நிலையில் சமீபத்தில் தர்பார் படக்குழு ஜெய்ப்பூரில் அடுத்தகட்ட படப்பிடிப்பைத் தொடங்கினர். கடும் பாதுகாப்பை மீறி மீண்டும் தர்பார் படப்பிடிப்பு காட்சி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ரஜினிகாந்த் போலீஸ் தோற்றத்தில் கார் அருகே நிற்க, அவர் பக்கத்தில் நயன்தாராவும் நின்று கொண்டு இருப்பது போல் உள்ளது. வழக்கம் போல் அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.