தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.304 உயர்வு!

 

தொடர்ந்து உயரும் தங்கத்தின்  விலை: சவரனுக்கு ரூ.304 உயர்வு!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்துள்ளது. 

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்துள்ளது. 

gold

சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வந்தது. அதன் காரணமாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டது. கடந்த சில வாரங்களாகத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே போகிறது. 

gold

இந்நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூபாய் 38 உயர்ந்து ஒரு கிராம் 3,718 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம், ரூ.304 உயர்ந்து ரூ.29,744-க்கு விற்பனையாகிறது.கடந்த 3 வாரங்களில் சவரனுக்கு 3,264   ரூபாய் வரை  அதிகரித்துள்ளது .இன்னும் ஓரிரு நாட்களில்  தங்கத்தின் விலை சவரனுக்கு 30 ஆயிரம் ரூபாயைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.