தொடரும் தண்ணீர் பற்றாக்குறை: குளங்களை தூர்வாரிய ரஜினி மக்கள் மன்றத்தினர்!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களிலும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
புதுச்சேரி : புதுச்சேரி மற்றும் சென்னையில் ரஜினி மக்கள் மன்றத்தினர் தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களிலும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல இடங்களில் கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் வற்றிவிட்டன. இதனால் பொது மக்கள் குடிநீருக்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மழைக் காலங்களில் ஏரி குளங்களைத் தூர்வாரி இருந்தாலும் தண்ணீர் பற்றாக்குறையே இருந்திருக்காது.
இந்நிலையில் புதுவை மூலகுளம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் அங்குள்ள குளத்தை தூய்மைப்படுத்தித் தூர்வாரினர். இதேபோல் அரக்கம் பாக்கம் ஊராட்சி குளமும் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தூர்வாரப்பட்டது. மேலும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாகச் சென்னை வில்லிவாக்கம், வானகரம் பகுதிகளில் லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாகக் குடிநீர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.