தொடரும் சோகம்! மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் விழுந்து 3 வயது குழந்தை பலி!! 

 

தொடரும் சோகம்! மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் விழுந்து 3 வயது குழந்தை பலி!! 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒண்டிப்புலிநாயக்கனூரில் மூர்த்தி என்பவரது 3 வயது மகன் ருத்ரன் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கி  உயிரிழந்தார். 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒண்டிப்புலிநாயக்கனூரில் மூர்த்தி என்பவரது 3 வயது மகன் ருத்ரன் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கி  உயிரிழந்தார். 

திருச்சி மாவட்டம் நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25 ஆம் தேதி சுஜித் என்ற 2 வயது குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தது. தமிழகத்தையே சோகத்தை ஆழ்த்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடியில் 2 வயது பெண் குழந்தை தண்ணீர் கேனில் தலைக்குப்புற கவிழ்ந்து உயிரிழந்தது. இதையடுத்து பண்ருட்டி அருகே 3 வயது குழந்தை செப்டிங் டாங்கில் விழுந்து உயிரிழந்தது. இப்படி குழந்தைகளின் உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்கதையாகிவருகின்றன. 

sujith

இந்நிலையில் தற்போது விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் மூர்த்தியின் மகன் ருத்ரன், ஒண்டிப்புலி நாயக்கனூரிலுள்ள தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளான். அங்கு  3 அடி ஆழத்திற்கு மழைநீர் சேகரிப்புக்காக குழி ஒன்றி தோண்டியிருந்தனர். நேற்று இரவு பெய்த மழையால் அந்த மழைநீர் தொட்டி  நீர் நிரம்பி காணப்பட்டது. இந்நிலையில் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ருத்ரன், எதிர்பாரத விதமாக தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளான். சிறுவனை காணவில்லை என அவனது உறவினர்கள் அக்கம் பக்கத்தில்தேடியுள்ளனர். அப்போது மழைநீர் சேகரிப்புக்காக அமைக்கப்பட்டிருந்த தொட்டிக்குள் ருத்ரன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இதைப்பார்த்து பதட்டமடைந்த சிறுவனின் உறவினர் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ருத்ரனை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.