தொடரும் கொரோனா பலி.. உலகளவில் 34 ஆயிரத்தை தாண்டியது!
நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 199 நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதுவரை உலகம் முழுவதும் 7 லட்சத்து 22 ஆயிரத்து 196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பல்வேறு நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கோயில்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பூங்காக்களை வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி மூடவைக்கக்கோரி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது. இதுவரை 34,026 உயிரிழந்துள்ளனர் . பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 724,201 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 152,071 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமாகி உள்ளனர்.