தொடரும் கள்ளக்காதல் விபரீதம்: மது வாங்கி கொடுத்து கணவனை கொல்ல திட்டம் தீட்டிய மனைவி!

 

தொடரும் கள்ளக்காதல் விபரீதம்: மது வாங்கி கொடுத்து கணவனை கொல்ல திட்டம் தீட்டிய மனைவி!

கணவரைக் கொலை செய்ய முயற்சித்த பெண்ணையும், அவரது காதலரையும்  போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்: கணவரைக் கொலை செய்ய முயற்சித்த பெண்ணையும், அவரது காதலரையும்  போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ராஜதனிக்கோட்டையைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி வடிவேலு. இவருக்கு  வனிதா என்ற மனைவியும், ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தையும் உள்ளது. கடந்த சில மாதங்களாகக் கருத்து வேறுபாடு காரணமாக வடிவேலுவும், வனிதாவும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.  

இந்நிலையில், தனியார் ஆலையில் பணியாற்றும்போது வனிதாவிற்கு, சரத்குமார் என்ற நபருடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக, இருவரும் இணைந்து வடிவேலுவை கொல்லத் திட்டமிட்டனர்.  வடிவேலுவை தனியாக அழைத்துச் சென்று மது வாங்கிக் கொடுத்த சரத்குமார் கத்தியால் அவரைச் சரமாரியாக குத்தியுள்ளார். 

படுகாயங்களுடன் தப்பிய வடிவேலு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி வனிதா, மற்றும் சரத்குமாரை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.