தொடரும் கனமழை: கேரளாவில் இதுவரை 28 பேர் பலி!

 

தொடரும் கனமழை: கேரளாவில் இதுவரை 28 பேர் பலி!

கேரள மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது

தொடரும் கனமழை: கேரளாவில் இதுவரை 28 பேர் பலி!

கேரளா: கேரளாவில் இதுவரை வெள்ளத்தால் 28 பேர் பலியாகியுள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. 

கேரள மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தேயிலை தோட்டங்களில்  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தண்டவாளங்கள் நீரில்  மூழ்கியுள்ளதால் 18 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.அதேபோல், கர்நாடகாவில் ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, தீவிரம் அடைந்துள்ளது. 

இதுவரை கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிராவில்  பெய்துவரும் கனமழையால்  சுமார் 2 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர்.  86 பேர் பலியாகியுள்ளனர்.  கேரளாவில் இதுவரை வெள்ளத்தால் 28 பேர் பலியாகியுள்ளனர். அதேபோல், கர்நாடகாவில் 22 பேரும் உயிரிழந்துள்ளனர். கனமழையால் கொச்சி விமான நிலையம் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.