தொடரும் அமெரிக்காவின் பரிதாபம் – கொரோனா பலி எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்தது

 

தொடரும் அமெரிக்காவின் பரிதாபம் – கொரோனா பலி எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்தது

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்துள்ளது.

நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 1 லட்சத்து 45 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 22 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 5 லட்சத்து 71 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். முதன்முதலில் கொரோனா வைரஸ் சீனாவில் பரவினாலும் தற்போது அந்த நாட்டில் பெருமளவில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஈரான், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மிக அதிகளவில் உள்ளது. குறிப்பாக கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடாக அமெரிக்கா உள்ளது.

ttn

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37,158-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் 710,021 பேர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20,002-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் 190,839 பேர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22,745-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் 172,434 பேர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18,681-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் 147,969 பேர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர்.