தொடங்கியது இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை! வெற்றி வாகையைச் சூடப்போவது யார்..!?

 

தொடங்கியது இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை! வெற்றி வாகையைச் சூடப்போவது யார்..!?

நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரியில் கடந்த 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரியில் கடந்த 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. மழை மற்றும் இயந்திரக் கோளாறுகள் காரணமாக நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் வாக்களிப்பு சற்று தாமதமாக நிகழ்ந்ததே தவிர மற்ற எந்த பிரச்சனையும் இல்லாமல் தேர்தல் சுமுகமாக நடைபெற்றது எனத் தேர்தல் அதிகாரி சத்ய பிரபா சாஹு தெரிவித்தார். 

Vote counting

தேர்தல் முடிந்த கையோடு, வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் இடங்களுக்குப் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்ட இடங்களுக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 24 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று தேர்தல் அதிகாரி அறிவித்திருந்தார். அதன் படி, இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தேர்தலில் போட்டியிட்ட அனைத்து கட்சிகளும் முடிவுகளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.