தைலாபுரத்தில் கூட மாம்பழம் பழுக்கவில்லையா? – ராமதாசை மீண்டும் வம்பிழுத்த தி.மு.க எம்.பி

 

தைலாபுரத்தில் கூட மாம்பழம் பழுக்கவில்லையா? – ராமதாசை மீண்டும் வம்பிழுத்த தி.மு.க எம்.பி

டாக்டர் ராமதாஸ் தன்னுடைய தைலாபுரம் தோட்டத்தில் மலரும் மலர்கள், காய்கறிகள், பழங்கள் படங்களை அவ்வப்போது ட்வீட் செய்து வருகிறார். அந்த வகையில், தைலாபுரம் தோட்டத்தில் முக்கனிகளில் இரு கனிகளைத் தரும் பலா, வாழை மரங்கள் என்று படங்களை வெளியிட்டிருந்தார்.

தைலாபுரம் தோட்டத்தில் கூட மாம்பழம் பழுக்கவில்லையா என்று தி.மு.க எம்.பி டாக்டர் செந்தில்குமார், டாக்டர் ராமதாசிடம் கேள்வி கேட்டுள்ளார்.
டாக்டர் ராமதாஸ் தன்னுடைய தைலாபுரம் தோட்டத்தில் மலரும் மலர்கள், காய்கறிகள், பழங்கள் படங்களை அவ்வப்போது ட்வீட் செய்து வருகிறார். அந்த வகையில், தைலாபுரம் தோட்டத்தில் முக்கனிகளில் இரு கனிகளைத் தரும் பலா, வாழை மரங்கள் என்று படங்களை வெளியிட்டிருந்தார்.
இதற்கு தி.மு.க எம்.பி டாக்டர் செந்தில்குமார் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். அதில், முக்கனி – மா, பலா, வாழை. பலா, வாழை உங்க தோட்டத்தில் இங்கே இருக்கு. மா எங்கே? ஐயா உங்க தோட்டத்தில் கூட மாம்பழம் பழுக்கவில்லையா… என்ன ஐயா பண்ணலாம்… சின்னத்தை மாற்றிவிடலாமா” என்று கேட்டிருந்தார். இது இணையத்தில் அனைவராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் அன்புமணியை எதிர்த்து டாக்டர் செந்தில் குமார் போட்டியிடுகிறார் என்று அறிவிப்பு வந்ததுமே அவரிடம் பா.ம.க-வினர் வம்பு செய்ய ஆரம்பித்தனர். அதிலிருந்து டாக்டர் செந்தில் பா.ம.க தலைவர் டாக்டர் ராமதாஸ், அன்புமணியை வச்சு செய்ய ஆரம்பித்துவிட்டார். இதனால் ஒருமுறை டாக்டர் செந்தில் குமாரை டாக்டர் ராமதாஸ் பிளாக் கூட செய்தார். அதையும் டாக்டர் செந்தில் குமார் சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். இப்படி டாக்டர் ராமதாசை தொடர்ந்து வம்பிழுப்பதில் டாக்டர் செந்திலுக்கு என்ன ஆனந்தமோ என்று இணையவாசிகள் கேள்வி எழுப்புகின்றனர்.