தைரியம் இருந்தால் சாவர்க்கருக்கு பாரத ரத்னா கொடுங்கள்! – சிவசேனா எம்.பி காட்டம்

 

தைரியம் இருந்தால் சாவர்க்கருக்கு பாரத ரத்னா கொடுங்கள்! – சிவசேனா எம்.பி காட்டம்

பாரதிய ஜனதா கட்சிக்கு தைரியம் இருந்தால் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கட்டும் என்று சிவசேனா எம்.பி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சிக்கு தைரியம் இருந்தால் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கட்டும் என்று சிவசேனா எம்.பி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

vinayak-raut

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து சிவசேனா எம்.பி விநாயக் ரவுத் பேசினார். அப்போது அவர் பாரதிய ஜனதா கட்சியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இதற்கு பா.ஜ.க எம்.பி-க்கள் கண்டனம் தெரிவித்தனர். அப்போது விநாயக் ரவுத் “இந்துத்துவம் பற்றி பாரதிய ஜனதா எங்களுக்கு கற்றுத்தர வேண்டாம். பாரதிய ஜனதா கட்சிக்கு தைரியம் இருந்தால் விநாயக் தாமேதார் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருதை அறிவிக்கட்டும். தேசிய குடிமக்கள் பதிவேட்டை சிவசேனா எதிர்க்கும். நாட்டின் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் திசை திருப்பும் வகையில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளது. என்.சி.ஆர் தொடர்பான பிரச்னையை கிளப்பிவிட்டு இந்த அரசு மக்களை, தேசத்தைத் திசை திருப்புகிறது. நீங்கள் என்.சி.ஆர் கொண்டுவந்தால் 35 கோடி பேர் தடுப்பு காவல் முகாம்களில் அடைக்கப்படுவார்கள்” என்றார்.