தேவையற்ற தொலைப்பேசி அழைப்புக்கள்: உலகளவில் இந்தியாவுக்கு 2-ம் இடம்

 

தேவையற்ற தொலைப்பேசி அழைப்புக்கள்: உலகளவில் இந்தியாவுக்கு 2-ம் இடம்

தேவையற்ற தொலைப்பேசி அழைப்புகளால் அதிகம் பாதிக்கப்படும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது

சென்னை: தேவையற்ற தொலைப்பேசி அழைப்புகளால் அதிகம் பாதிக்கப்படும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

ஸ்பேம் அழைப்புகள் எனப்படும் தேவையற்ற தொலைப்பேசி அழைப்புகளால் அதிகம் பாதிக்கப்படும் உலக நாடுகளின் பட்டியலை பிரபல தகவல் பரிமாற்ற செயலியான ட்ரூகாலர் வெளியிட்டுள்ளது.

அதில், இந்தியர்கள் சராசரியாக ஒரு மாதத்திற்கு 22.3 தேவையற்ற அழைப்புக்களை பெற்றுள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 1.5 சதவிகிதம் குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள பிரேசில் வாசிகள் மாதத்திற்கு 37.5 தேவையற்ற அழைப்புக்களை பெறுவதாக குறிப்பிட்டுள்ள ட்ரூகாலர் புள்ளி விவரத்தில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 81 சதவிகிதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டில் மட்டும் இந்தியர்கள் பெற்ற மொத்த அழைப்புக்களின் 6 சதவீதம் தேவையற்ற அழைப்புகளாகும். கடந்த ஆண்டில் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியாவை நடப்பாண்டில் பிரேசில் பின்னுக்கு தள்ளியுள்ளது.

தொலைத் தொடர்பு துறையில் கொண்டு வரப்பட்ட சில மாற்றங்களின் காரணமாகவே இந்தியாவில் தேவையற்ற அழைப்புக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ட்ரூகாலர் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.