தேவைப்பட்டால் விஜயகாந்த் உடன் கூட்டணி: சரத்குமார் வியூகம்

 

தேவைப்பட்டால் விஜயகாந்த் உடன் கூட்டணி: சரத்குமார் வியூகம்

தேர்தல் நெருங்கும் சமயத்தில் தேவைப்பட்டால் விஜயகாந்த் உடன் கூட்டணி அமைக்கப்படும் என சரத்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னை: தேர்தல் நெருங்கும் சமயத்தில் தேவைப்பட்டால் விஜயகாந்த் உடன் கூட்டணி அமைக்கப்படும் என சரத்குமார் தெரிவித்துள்ளார். 

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அப்போது அவர் கூறுகையில், கோடநாடு விவகாரத்தில் முதல்வர் தன் மீது குற்றம் இல்லை என தெரிவித்துள்ளார். ஆகையால், இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரிக்க தனிப்பட்ட கமிஷன் அமைத்திட வேண்டும் என தெரிவித்தார்.

அதேபோல், சட்டமன்றத்தை நோக்கி தான் பயணித்துக் கொண்டிருப்பதாக கூறிய சரத்குமார், கட்சியின் ஆட்சி மன்ற குழு தீர்மானித்தால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் தெரிவித்தார்.

மேலும், தேர்தல் நெருங்கும் சமயத்தில் தேவைப்படும்போது விஜயகாந்த் உடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைக்கும் என்றும் சரத்குமார் கூறியுள்ளார்.