தேவாலயத்தில் ஊழியம் செய்யும் முதியவர் கொலை: சென்னை ஆவடியில் நடந்த பயங்கரம்!

 

தேவாலயத்தில் ஊழியம் செய்யும் முதியவர் கொலை: சென்னை ஆவடியில் நடந்த பயங்கரம்!

ஈனேஷை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை தாம்பரம் அருகே வைத்து கைதுசெய்தனர். 

சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஈனேஷ். 62 வயதான இவர்  மத்திய பாதுகாப்பு படைக்கு சொந்தமான நிறுவனத்தில் பணியாற்றி கொண்டே பட்டாபிராம் வள்ளலார் நகரில் உள்ள தேவாலயத்தில் ஊழியம் செய்து வருகிறார். 

yn

இந்நிலையில் தேவாலயத்திற்கு இரவு லைட் ஆன் செய்ய வந்த ஈனேஷ் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது  நண்பர்களும் குடும்பத்தினரும் தேவாலயம் வந்துள்ளனர். அப்போது ஈனேஷ் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார்.  இதுகுறித்து உடனே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  தேவாலயத்தில் உள்ள சிசிடிவி ஆய்வு செய்தனர். அதில் மோசஸ் என்பவர் ஈனேஷை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை தாம்பரம் அருகே வைத்து கைதுசெய்தனர். 

ttn

கைதான மோசஸ் மீது ஏற்கனவே  சத்தியவேடு காவல் நிலையத்தில் கொலை வழக்கும், பட்டாபிராம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகளும்  பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஈனேஷ் கொலைக்கான காரணத்தை போலீசார் மோசஸிடம் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது..