தேவர் குரு பூஜையில் கருணாஸ்? விலக்கு அளித்து நீதிமன்றம் உத்தரவு
தேவர் குரு பூஜையில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: தேவர் குரு பூஜையில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கருணாஸ் எம்.எல்.ஏ, நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தார் கருணாஸ்.
இந்நிலையில், தொகுதி மக்கள் பல நாட்களாக பார்க்கவில்லை, அவர்களை பார்க்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார் கருணாஸ். அதை ஏற்றுக் கொண்ட எழும்பூர் நீதிமன்றம், கருணாஸுக்கு 4 நாட்கள் கருணாஸ் சுதந்திரமாக செயல்படலாம் என உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, வருகின்ற 30-ஆம் தேதி நடைபெறும் தேவர் குரு பூஜையில் கருணாஸ் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.