தேர்வாகி பயிற்சியில் இருக்கும் காவலர்கள் உடனடியாக பணியில் சேர உத்தரவு!

 

தேர்வாகி பயிற்சியில் இருக்கும் காவலர்கள் உடனடியாக பணியில் சேர உத்தரவு!

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கம் சற்றும் குறையாததால் மே.3 ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

police

இந்நிலையில் தமிழக காவல்துறையில் தேர்வாகி பயிற்சியில் இருக்கும் காவலர்கள் உடனடியாக பணியில் சேர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பயிற்சியில் இருக்கும் 8538 பேரும் மே 3ம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் பணிகளுக்காக மேலும் புதிய காவலர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியிலிருக்கும் 8538 பேரும் பணியில் சேருவதற்கு முன்பாக சுவாச பிரச்சினை மற்றும் காய்ச்சல் பரிசோதனை செய்வது கட்டாயம் என்றும் உத்தரவிட்டுள்ளது.