தேர்தல் முடிவுக்கு முன்பே பாஜக கொடுத்த விருந்து: நம்ம ஊர்ல இருந்து யார் யார் கலந்துக்கிட்டாங்க தெரியுமா?

 

தேர்தல் முடிவுக்கு முன்பே பாஜக கொடுத்த விருந்து: நம்ம ஊர்ல இருந்து யார் யார் கலந்துக்கிட்டாங்க தெரியுமா?

தேர்தல் முடிவுகள் வெளியாகும் வேளையில் பா.ஜ.க தலைவர் அமித்ஷா அளித்த விருந்தில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கலந்து கொண்டர். 

புதுடெல்லி:  தேர்தல் முடிவுகள் வெளியாகும் வேளையில் பா.ஜ.க தலைவர் அமித்ஷா அளித்த விருந்தில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கலந்து கொண்டர். 

ops

மத்திய ஆட்சியை தீர்மானிக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் 7 கட்டமாக நிறைவு பெற்றுள்ளன. இதையடுத்து நாளை  வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து நாடே காத்திருக்கிறது. இந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்  பாஜகவுக்கே சாதகமாக வந்துள்ளது. 

pm

இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா டெல்லியில் நேற்று  விருந்தளித்தார். டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் நடைபெற்ற இந்த விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

sarath

குறிப்பாகத் தமிழகத்திலிருந்து  ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், அன்புமணி, ஜி.கே.வாசன், சரத்குமார், ஏ.சி.சண்முகம், கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 

 

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான  சரத்குமார் மோடியுடன் எடுத்த செல்பியை  பதிவிட்டுள்ளார்.