தேர்தலுக்கு முன்பே விருந்து! டெல்லி விரைகிறார் முதலமைச்சர் 

 

தேர்தலுக்கு முன்பே விருந்து! டெல்லி விரைகிறார் முதலமைச்சர் 

கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா நாளை விருந்து அளிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்லவிருக்கிறார். முதல்வரும் அந்த விருந்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா நாளை விருந்து அளிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்லவிருக்கிறார். முதல்வரும் அந்த விருந்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதமாக இருப்பதை கொண்டாடுவதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கு பா.ஜ., தலைவர் அமித்ஷா நாளை பாஜக நிர்வாகிகளுக்கு விருந்தளிக்கிறார். இந்த விருந்தில் அதிமுக, அகாலிதளம், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா மற்றும் லோக் சக்தி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்பார் என தெரிகிறது. இதேபோன்று காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டம் மே 23 அல்லது அதற்கு பின்னர் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருடன் துணைமுதல்வர் ஒ பன்னீர் செல்வமும்  இன்று இரவு 9 மணிக்கு டெல்லிக்கு செல்லவுள்ளார்.