தேர்தலுக்கு தயாராகும் மக்கள் நீதி மய்யம்: 575 புதிய பொறுப்பாளர்களை நியமித்து கமல் உத்தரவு!

 

தேர்தலுக்கு தயாராகும் மக்கள் நீதி மய்யம்: 575 புதிய பொறுப்பாளர்களை நியமித்து கமல் உத்தரவு!

மக்கள் நீதி மய்யத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் 575 புதிய பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் 575 புதிய பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக பல்வேறு கட்சிகளும் தங்களின் கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஆகப்பெரிய கட்சிகளாக அறியப்படும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. புதிய பொறுப்பாளர்களை நியமிப்பது, ஆலோசனை கூட்டங்களை நடத்துவது என நேற்று ஆரம்பிக்கப்பட்ட கட்சிகள் முதல், தேர்தல் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட கட்சிகள் வரை அனைத்து கட்சிகளும் தங்களால் இயன்றதைச் செய்து வருகின்றன.

kamal

அந்த வகையில், மக்கள் நீதி மய்யத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக 234 தொகுதிகளுக்கும் 575 புதிய பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உத்தரவிட்டுள்ளார். 

மேலும், பதவியின் பொறுப்பை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும் என்றும், மக்களின் தொண்டர்களாக செயலாற்ற வேண்டும் என்றும் புதிய பொறுப்பாளர்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை வழங்கியுள்ளார்.