தேர்தலில் வாக்களித்த சர்ச்சை: மௌனத்தை களைத்த அக்ஷய் குமார்

 

தேர்தலில் வாக்களித்த சர்ச்சை: மௌனத்தை களைத்த அக்ஷய் குமார்

நடிகர் அக்‌‌ஷய் குமார் வாக்களிக்காதது குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் அதுகுறித்து தற்போது  விளக்கம் அளித்துள்ளார். 

சென்னை: நடிகர் அக்‌‌ஷய் குமார் வாக்களிக்காதது குறித்து எழுந்த சர்ச்சைக்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த திங்கள் அன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவில் இந்தி நடிகர், நடிகைகள் வாக்களித்தனர். ஆனால் அக்‌‌ஷய் குமார் வாக்களிக்கவில்லை.இது மிகப்பெரிய சர்ச்சையானது. 

அதையடுத்து பிளாங் திரைப்பட திரையிடல் மும்பையில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அப்போது அக்‌‌ஷய் குமாரிடம் பத்திரிகையாளர் ஒருவர் இது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் பதில் அளிக்காமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார். கடந்த சில ஆண்டுகளாகவே அக்‌‌ஷய் குமார், ‘டாய்லெட்’, ‘எக் ப்ரேம் கதா’, ‘பேட் மேன்’ உள்ளிட்ட சமூக கருத்துகளைத் தாங்கிய படங்களில் நடித்து வருகிறார். வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

loksabha election

‘வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு விளம்பரங்களில் நடித்த அக்‌‌ஷய் இவ்வாறு செய்வதா?’ என்று கேள்விகள் எழுந்தன. மேலும் அக்‌‌ஷய் குமார் கடந்த 2017ம் ஆண்டு தன்னிடம் கனடா குடியுரிமை இருப்பதாகப் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். உடனே அதை இந்த சம்பவத் தோடு முடிச்சு போட்டு செய்திகள் வெளியாகின. 

இந்த நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘என் குடியுரிமை குறித்து தேவையில்லாத ஆர்வமும், எதிர்க்கருத்துகளும் ஏன் பரப்பப்படுகின்றன என்று எனக்குப் புரியவில்லை. நான் கனடா குடியுரிமை வைத்திருப்பது குறித்து ஒருபோதும் மறைத்ததில்லை. யாரிடமும் மறுத்ததும் இல்லை. இது எந்த அளவுக்கு உண்மையோ, நான் கடந்த 7 ஆண்டுகளாகக் கனடாவுக்குச் செல்லவில்லை என்பதும் அதே அளவுக்கு உண்மைதான். 

நான் இந்தியாவில் வேலை செய்கிறேன். அனைத்து வரிகளையும் இந்தியாவிலேயே செலுத்துகிறேன். யாருக்கு என்னுடைய நாட்டுப் பற்றினை நிரூபிக்க வேண்டிய தேவையில்லை. தேவையில்லாமல் என்னுடைய குடியுரிமை குறித்து விமர்சனங்கள் எழுவது வருத்தமாக உள்ளது. இது தனிப்பட்ட, சட்ட ரீதியான, அரசியலற்ற ஒரு விஷயம். இந்தியாவை வலிமையாக்க என்னால் ஆன சிறிய பணியைத் தொடர்ந்து செய்ய விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.