தேர்தலில் தோல்வியை தழுவியது ஏன்? ஆராய 5 பேர் கொண்ட குழு அமைத்தது காங்கிரஸ்!

 

தேர்தலில் தோல்வியை தழுவியது ஏன்? ஆராய 5 பேர் கொண்ட குழு அமைத்தது காங்கிரஸ்!

தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ், தமிழகத்தை தவிர மற்ற 4 மாநிலங்களில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் தோல்வி குறித்து ஆராய 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது. இந்த குழுவினர் தேர்தல் தோல்வி குறித்து ஆராய்ந்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் காங்கிரஸ் தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தலில் தோல்வியை தழுவியது ஏன்? ஆராய 5 பேர் கொண்ட குழு அமைத்தது காங்கிரஸ்!

குழுவின் தலைவராக அசோக் சவான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். குழுவில் மூத்த தலைவரான மணிஷ் திவாரி, ஜோதிமணி, வின்செண்ட் பாலா, சல்மான் குர்ஷிட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.