தேர்தலில் தோற்ற அடுத்த நாளே வேலையை காட்டும் பாஜக! உச்சத்தில் சிலிண்டர் விலை… 

 

தேர்தலில் தோற்ற அடுத்த நாளே வேலையை காட்டும் பாஜக! உச்சத்தில் சிலிண்டர் விலை… 

டெல்லி தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாளே நாடு முழுவதும் மானியமில்லாத சிலிண்டர்கள் விலை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெல்லி தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாளே நாடு முழுவதும் மானியமில்லாத சிலிண்டர்கள் விலை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெல்லியில் 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ.714க்கு விற்கப்பட்ட நிலையில், இனிமேல் 858 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது. மும்பையில் மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ.145 உயர்த்தப்பட்டு  ரூ.829 ஆக அதிகரித்துள்ளது. கொல்கத்தாவில் மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ.21.50 பைசா உயர்ந்து, ரூ.747 ஆகவும், சென்னையில் ரூ.147 உயர்ந்து, ரூ.881 ஆகவும் உயர்ந்துள்ளது.

சிலிண்டர் விலை

எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் எல்பிஜி சிலிண்டர்களை சந்தை விலையில் விற்கிறார்கள், ஆனால் அரசாங்கம் ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு நேரடி மானியம் வழங்குவதன் மூலம் மானியம் வழங்குகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது, ​​அரசாங்கம் அதிக மானியத்தை வழங்குகிறது. வரி விதிகளின்படி, சிலிண்டர்கள் மீதான ஜிஎஸ்டி எரிபொருளின் சந்தை விகிதத்தில் கணக்கிடப்பட வேண்டும். சிலிண்டர் விலையின் ஒரு பகுதியை மானியமாக அரசு வழங்க வேண்டுமானால் சந்தை விலைப்படி ஜிஎஸ்டி செலுத்தப்பட வேண்டும். சிலிண்டர் விலையின் ஏற்ற இறக்கத்திற்கு இதுவும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சென்னையில் மானியம் இல்லா சிலிண்டரின் விலை 290 ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.