தேர்தலில் ஏற்பட்ட மோதல்! வாக்குச்சாவடி அருகே ஒருவர் வெட்டிக்கொலை!!

 

தேர்தலில் ஏற்பட்ட மோதல்! வாக்குச்சாவடி அருகே ஒருவர் வெட்டிக்கொலை!!

தூத்துக்குடியில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான 2 ஆம் கட்ட வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடி அருகே ஒருவர் வெட்டிக்கொலைச் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான 2 ஆம் கட்ட வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடி அருகே ஒருவர் வெட்டிக்கொலைச் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுகள் இன்றுடன் முடிவடைந்த நிலையில் அனைத்து வாக்கு பெட்டிகளும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது.  இந்த தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜனவரி 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

Murder

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஒன்றியத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு லதா மாசான சாமி என்பவருக்கும், இளையராஜா என்பவரும் கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் வாக்குச்சாவடி அருகே இருவேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மேட்டூர் கிராமத்தில் நடந்த இந்த மோதலில் லதா மாசான சாமி என்பவரின் உறவினர் மாரியப்பனை இளையராஜா ஆதரவாளர்கள் அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மாரியப்பன் அருகிலிருக்கும் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மோதல் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.