தேன் கூட்டில் கல் அடித்தது போல் ஆகிவிட்டது சிவகுமாரின் நிலை! – வைரலாகும் மீம்ஸ்களின் தொகுப்பு

 

தேன் கூட்டில் கல் அடித்தது போல் ஆகிவிட்டது சிவகுமாரின் நிலை! – வைரலாகும் மீம்ஸ்களின் தொகுப்பு

செல்ஃபி எடுக்க வந்த இளைஞரின் செல்ஃபோனை தட்டிவிட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் நடிகர் சிவகுமார்.

சென்னை: செல்ஃபி எடுக்க வந்த இளைஞரின் செல்ஃபோனை தட்டிவிட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் நடிகர் சிவகுமார்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே தனியார் கருத்தரிப்பு மையம் திறப்புவிழா  நடந்தது. இந்த விழாவில்  பிரபல திரைப்பட நடிகரும், நடிகர்கள் சூர்யா,கார்த்தியின் தந்தையுமான  சிவக்குமார் மற்றும் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். 

இந்த விழாவில் ஏராளமான ரசிகர்களும், பொதுமக்களும் சிவகுமாரை காண்பதற்காகக் கூடியிருந்தனர். அப்போது அங்கு வந்த நடிகர் சிவகுமார் கருத்தரிப்பு மையத்தைத் திறக்க படிக்கட்டில் ஏறி மேலே வந்த போது இளைஞர் ஒருவர் அவருடன்  செல்ஃபி எடுக்க முயன்றார்.  இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார், திடீரென அந்த இளைஞனின் கையில் இருந்த செல்போனை தட்டிவிட்டார். 

இந்த விவகாரம் காட்டுத் தீயாக பரவியதையடுத்து ‘#SivakumarShouldApologize’ (சிவகுமார் மன்னிப்பு கேட்க வேண்டும்) என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக தொடங்கியுள்ளது.

அதோடு அவரை விட்டுவிட்டால் எப்படி? செய்த காரியத்திற்கான பலனை அவர் அனுபவிக்க வேண்டும் என மீம் கிரியேட்டர்ஸ்களும் தங்களின் பங்குக்கு மீம்ஸ்களை வாரி இறைத்து வருகின்றனர். சமூகவலைதளங்களை சிவகுமார் மீம்ஸ் ஆக்கிரமித்துள்ளது. குபீர் சிரிப்புடன் வலம் வரும் அந்த மீம்ஸ்களை, நெட்டிசன்களும் சலைக்காமல் ஷேர் செய்து வருகின்றனர். 

அதுமட்டுமின்றி, சிவகுமார் போல் நல்ல இமேஜ் வைத்திருக்கும் நட்சத்திரங்கள் பொது இடங்களில் கோபத்தை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.