தேனியில் மூடப்பட்டது டாஸ்மாக் மதுபானக் கடை! சோகத்தில் திரும்பிய குடிமகன்கள்

 

தேனியில் மூடப்பட்டது டாஸ்மாக் மதுபானக் கடை! சோகத்தில் திரும்பிய குடிமகன்கள்

கொரோனா வைரஸால் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட,  கொரோனா வைரஸ் அதிகமாக பரவியுள்ள சென்னை காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் டாஸ்மாக்குகள் தவிர தமிழகத்திலுள்ள மற்ற அனைத்து டாஸ்மாக்குகளும் இன்று திறக்கப்பட்டு விட்டன.

கொரோனா வைரஸால் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட,  கொரோனா வைரஸ் அதிகமாக பரவியுள்ள சென்னை காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் டாஸ்மாக்குகள் தவிர தமிழகத்திலுள்ள மற்ற அனைத்து டாஸ்மாக்குகளும் இன்று திறக்கப்பட்டு விட்டன. மது வாங்குவதற்கு இன்று காலை முதல் குடிமகன்கள் வரிசையில் நின்று மதுவாங்கி செல்கின்றனர். டாஸ்மாக் மதுபான கடைகள் திறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

tasmac

இந்நிலையில் தேனி மாவட்டம் டொம்புச்சேரியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் 5000 க்கும் மேற்பட்டோர் திரண்டு நீண்ட வரிசையில் நின்றதால் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பொது மக்களின் நலன் கருதி அந்தக் கடையை மூட மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டதன் பேரில் டொம்புச்சேரி டாஸ்மாக் மதுபானக் கடை மூடப்பட்டது.