தேனியிலுள்ள சொந்த வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார் இயக்குநர் பாரதிராஜா!

 

தேனியிலுள்ள சொந்த வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார் இயக்குநர் பாரதிராஜா!

தேனி மாவட்ட எல்லைகளில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் சென்னையிலிருந்து தேனிக்கு வந்த பாரதிராஜா தேவதானப்பட்டி அருகே மாவட்ட எல்ல்லையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.  அதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இயக்குநர் பாரதிராஜா வீடு

இருப்பினும் கொரோனா பாதிப்பில் சிவப்பு நிற மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னையிலிருந்து அவர், தேனிக்கு வந்திருப்பதால் தேனியிலுள்ள என்.ஆர்.டி. நகரிலுள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதற்கான அடையாள சீட்டை அவரது வீட்டில் நகராட்சி சுகாதாரப்பிரிவு அலுவலர்கள் ஒட்டியுள்ளனர்.