தேச விரோதிகளுக்கு பிரியாணி கிடைக்காது துப்பாக்கி குண்டுதான் கிடைக்கும்….. கர்நாடக பா.ஜ.க. அமைச்சர்

 

தேச விரோதிகளுக்கு பிரியாணி கிடைக்காது துப்பாக்கி குண்டுதான் கிடைக்கும்….. கர்நாடக பா.ஜ.க. அமைச்சர்

மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தேச விரோதிகளுக்கு பிரியாணி கிடைக்காது துப்பாக்கி குண்டுதான் கிடைக்கும் என கர்நாடக பா.ஜ.க. அமைச்சர் சி.டி. ரவி தெரிவித்தார்.

டெல்லியில் பிப்ரவரி 8ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் அனைத்தும் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த திங்கட்கிழமையன்று பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரும், மத்திய நிதித்துறை இணையமைச்சருமான அனுராக் தாகூர் டெல்லியில் தனது கட்சி வேட்பாளருகளுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அனுராக் தாகூர்

அந்த பிரச்சார கூட்டத்தில் அனுராக் தாகூர்  பேசுகையில், பல முறை துரோகிகளை சுட்டு தள்ளு என்ற வார்த்தை பேசியதாக தெரிகிறது. இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு புகார் சென்றது. தேர்தல் அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அனுராக் தாகூருக்கு ஆதரவாக கர்நாடக பா.ஜ.க. அமைச்சர் சி.டி. ரவி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி குண்டு

கர்நாடக சுற்றுலா துறை அமைச்சர் சி.டி. ரவி தனது டிவிட்டரில், தீவிரவாதிகள் அஜ்மல் கசாப் மற்றும் யாகூப் மேனனின் மரணத்தை எதிர்ப்பவர்கள், துக்டே துக்தே கும்பலை ஆதரிப்பவர்கள் மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பொய்களை பரப்பும் உள்ளிட்ட துரோகிகள் குறித்துதான் அனுராக் தாகூர் பேசியுள்ளார். தேச விரோதிகளுக்கு பிரியாணி கிடைக்காது துப்பாக்கி குண்டுதான் கிடைக்கும். #istandwithanuragthakur என்ற கேஷ்டேக்கும் பதிவு செய்துள்ளார்.