தேசிய நெடுஞ்சாலை டோல்கேட் ஊழியர்கள் வேல்முருகனிடம் வேண்டுகோள்!

 

தேசிய நெடுஞ்சாலை டோல்கேட் ஊழியர்கள் வேல்முருகனிடம் வேண்டுகோள்!

சுங்கச்சாவடிகளில் உள்ளூர்காரர்களை பணிநீக்கம் செய்துவிட்டு வெளிமாநிலத்தவர்களை பணியில் அமர்த்த சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு வேல்முருகன்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் என்றாலே தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன்தான் டக்கென ஞாபகத்துக்கு வருவார். அவர்களின் கொள்ளையை எதிர்ப்பதையே கொள்கையாக வைத்திருப்பவர் வேல்முருகன். அவர் வாகனம் சுங்கச்சாவடியை கடந்து செல்வதற்குள் ஊழியர்களுக்கு திக்திக் என்றிருக்கும். அண்ணன் செய்துகாட்டிய சம்பவங்கள் அப்படி. இந்நிலையில், உளுந்தூர்பேட்டை முதல் சேலம் வரையுள்ள சுங்கச்சாவடியில் பணிபுரியும் தொழிலாளர்கள் அவ்வழியாக வந்த வேல்முருகனிடம் மனு ஒன்றை இன்று அளித்தார்கள்.
 

Ulundurpet – Salem tollgate

அந்த மனுவில் ’அவர்கள் பணிபுரியும் அந்த சுங்கச்சாவடிகளில் உள்ளூர்காரர்களை பணிநீக்கம் செய்துவிட்டு வெளிமாநிலத்தவர்களை பணியில் அமர்த்த சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு வேல்முருகன்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட வேல்முருகன், சுங்கச்சாவடி ஊழியர்களிடம் கவலைப்படால் பணியை தொடருமாறும், அவர்களுக்காக எப்போதும் துணை நிற்பதாகவும் உறுதியளித்தார். சீக்கிரமே சம்பவத்தை எதிர்பார்க்கலாம் போல!