தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு

 

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு

சிறந்த ஆசிரியராக விளங்கியவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதியை ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் தேசிய நல்லாசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டன. தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 45 ஆசிரியர்கள் மத்தியக் கல்வி அமைச்சகத்தால் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்களாவர்.

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு

அதில், விழுப்புரம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலிப், சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சரஸ்வதி ஆகிய இருவரும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு டெல்லி விக்யான் பவனில் செப்டம்பர் 5-ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையால் விருது வழங்கப்படவுள்ளது.