தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை!

 

தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை!

தேசத் துரோக வழக்கில் வைகோ குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

சென்னை: தேசத் துரோக வழக்கில் வைகோ குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

vaiko

கடந்த  2009ஆம் ஆண்டு நான் குற்றம்சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியிட்டு விழா சென்னை ராணி சீதை மன்றத்தில் நடந்தது. இந்த விழாவில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கருத்துக்களைப் பேசியதாக அவர் மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

vaiko

இதையடுத்து கடந்த மாதம் 17 ஆம் தேதி  இந்த வழக்கு நீதிபதி சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வைகோ,  ‘நான் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினேன். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு இலங்கை அரசு தான்  காரணம். நான் மத்திய அரசு மீது எந்த காழ்ப்புணர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை.  கடந்த 2002ஆம் ஆண்டு நான் மக்களவையில் விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன் இன்றும் ஆதரிக்கிறேன்,நாளையும் ஆதரிப்பேன் என்று பேசியதைச் சுட்டிக்காட்டி ஒரு பொதுக்கூட்டத்தில் நான் பேசினேன். அதற்காக என் மீது பொடா சட்டம் சட்டம் பாய்ந்தது. நான் கைது செய்யப்பட்டேன். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தடை செய்யப்பட்ட அமைப்பைப் பற்றிப் பேசுவது குற்றமல்ல என்று தீர்ப்பளித்தது’ என்றார். 

vaiko

இந்நிலையில் தேசத் துரோக வழக்கில் வைகோ குற்றவாளி எனச் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அத்துடன் அவருக்கு ஓராண்டு சிறையும், 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை நீதி சாந்தி வழங்கினார். இதைத் தொடர்ந்து அபராத தொகையை வைகோ செலுத்தினார். 
மேலும் தீர்ப்பு குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று வைகோவிடம் நீதிபதி கேட்டதற்கு இன்றே தண்டனை குறித்து அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து வைகோ மேல்முறையீடும் செய்ய வாய்ப்புள்ளது. 

முன்னதாக வைகோ திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட  இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.