தேசத்தின் நலனுக்காக என் கருத்துக்களை உரக்க சொல்வேன் : பாஜக வெற்றி குறித்து சித்தார்த் பதிவு
என் கருத்துகளை எந்தவித பயமுமின்றி உரக்கச் சொல்வேன் என்று பாஜக வெற்றி பெற்றிருப்பது குறித்து நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ளார்.
சென்னை: என் கருத்துகளை எந்தவித பயமுமின்றி உரக்கச் சொல்வேன் என்று பாஜக வெற்றி பெற்றிருப்பது குறித்து நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நிறைவடைந்தது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையல் இன்று நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி பகல் 2:00 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 347 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 88 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
Congratulations #PrimeMinister @narendramodi ji for a historic win in the #Elections2019. I hope you will take us to great heights. I promise to always voice my honest opinions in the interest of our great nation as a citizen without fear. Please spread love. God bless. Jai Hind.
— Siddharth (@Actor_Siddharth) May 23, 2019
இதனால், பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே பல்வேறு கருத்துகளைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவருகிறார் நடிகர் சித்தார்த். தற்போது மீண்டும் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் ‘2019 தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்குப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். நாட்டை நல்ல உயரத்துக்கு எடுத்துச் செல்வீர்கள் என நம்புகிறேன். தேசத்தின் நலனுக்காக எனது நேர்மையான கருத்துகளை, ஒரு குடிமகனாக, எந்தவித பயமுமின்றி எப்போதும் உரக்கச் சொல்வேன் என உறுதி கூறுகிறேன். தயவுசெய்து அன்பை பரப்புங்கள். இறைவன் ஆசிர்வதிக்கட்டும்.ஜெய்ஹிந்த்’ என்று பதிவிட்டுள்ளார்.