தெலுங்கு நடிகரோடு கட்டிப்பிடித்து உருண்ட ‘களவாணி’ விமல்! போதையில் ரகளை!?

 

தெலுங்கு நடிகரோடு கட்டிப்பிடித்து உருண்ட ‘களவாணி’ விமல்! போதையில் ரகளை!?

களவாணி’ படத்தின் மூலம் கவனத்திற்குரிய நடிகராக அறியப்பட்டவர் விமல். அதன் பிறகு அந்த படத்தின் லெவலுக்கு எந்தப்படமும் இல்லை என்கிற அளவுக்கு தொடர்ந்து இறங்குமுகமாகவே இருந்தது இவரின் சினிமா கிராஃப்ட்! அதற்கு அவரது பொல்லாத போதைப் பழக்கம்தான் காரணம் என்பது சினிமாக்காரர்களைவிட விமலுக்கு நல்லாவே தெரியும்!

‘களவாணி’ படத்தின் மூலம் கவனத்திற்குரிய நடிகராக அறியப்பட்டவர் விமல். அதன் பிறகு அந்த படத்தின் லெவலுக்கு எந்தப்படமும் இல்லை என்கிற அளவுக்கு தொடர்ந்து இறங்குமுகமாகவே இருந்தது இவரின் சினிமா கிராஃப்ட்! அதற்கு அவரது பொல்லாத போதைப் பழக்கம்தான் காரணம் என்பது சினிமாக்காரர்களைவிட விமலுக்கு நல்லாவே தெரியும்!

பின்னிரவு நேரங்களில் இவர் போதையில் அவ்வப்போது கலாட்டா 
பண்ணுவதும்,அதை அடுத்த ஆளுக்கு தெரியாமல் சமாதானம் செய்து வைப்பதுமான சங்கதி நிறையவே உண்டு! லேட்டஸ்ட்டாக சாலிகிராமம் ஏரியாவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் குடி போதையில் பண்ணின அடிதடி பஞ்சாயத்து போலீஸ் புகார் வரை போயிருப்பதுதான் சோகம்!

நேற்று முன் தினம் பின்னிரவு நேரத்தில் அந்த விடுதிக்கு வந்த விமல்,தனக்கு ஒரு அரை வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அவர் இருந்த நிலையைப் பார்த்து ‘ரூம்ஸ் எல்லாமே ஃபுல்லா இருக்கு,ஸாரி!’என்று சொல்லியிருக்கிறார் அங்கிருந்த நிர்வாகி.ஃபுல் மப்பில் இருந்த விமல் அதையெல்லாம் காதில் வாங்காமல் ரகளையில் ஈடு பட்டிருக்கார்!

abisheik ttn

ஏற்கனவே அங்கு தங்கியிருந்த தெலுங்கு நடிகர் அபிஷேக் படப்பிடிப்பு முடித்துவிட்டு அங்கு வந்திருக்கிறார்.அவர் யார் என்ன என்று தெரியாமல் அவரை வம்புக்கு இழுத்து விமலும் அவருடன் வந்த அவரது நண்பர்களும் அபிஷேக்கை தாக்கியிருக்கிறார்கள்! இந்த சம்பவம் முழுக்க அங்கிருந்த சிசிடிவி கேமெராவில் பதிவாகிவிட்டது.

அபுஷேக் தெலுங்கில் பிரபலமான தயாரிப்பாளர் ஒருவரின் வாரிசு. தமிழில் நடிக்க வேண்டும் என்பதற்காக தமிழ் நாட்டுக்கு வந்திருக்கிறார். விமலும் ஒரு நடிகர் என்பதால் மன்னிப்பு கேட்டால் போதும் சம்பவத்தை பெரிசு பண்ணவேண்டாம் என்று பெருந்தனையோடு நேற்று காலையில் சொல்லியிருக்கிறார் அபிஷேக்.

மன்னிப்பா….அதெல்லாம் எங்க அகராதியிலேயே கிடையாது என்று அகராதித்தனமான வார்த்தைகளில் மேலும் வம்ப்புக்கு இழுக்கிற மாதிரி பஞ்சாயத்து வைத்திருக்கிறார்.சண்டக்கோழி படத்தில் ஒரு டயலாக் வருமே ‘அண்ணே,தம்பி மேல கை கிய் வச்சுருலயே’என்று ஒரு வில்லன் பார்ட்டி கேட்பார். அந்த மாதிரி ஆந்திராவில் செல்வாக்கான ஆளாம்,அபிஷேக்கின் அப்பா!

இப்போ,வழக்கு பதிவு செய்துவிட்டார்கள்.கடந்த ஆறு மாசமாக அடிச்ச போதை மொத்தமும் இறங்கிப்போய் அதிர்ச்சியில் இருக்கிறார் விமல்! இது தேவையா!?