தெலுங்கானாவில் 22 வயது பெண்ணுக்கு உதவுவதாக கூறி 80 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை !!

 

தெலுங்கானாவில் 22 வயது பெண்ணுக்கு உதவுவதாக கூறி 80 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை !!

ஃபலக்னுமாவைச் சேர்ந்த அந்த பெண் சமீபத்தில் தனது கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர் தங்குவதற்கு அவரது வயதான உறவினர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். கடந்த வாரம் தன்னுடைய ஆண் நண்பருடன் அந்த முதியவர் வீட்டிற்கு சென்றுள்ளார்

தெலுங்கானாவில் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்ணுக்கு உதவுவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று 22 வயதான பெண் ஒருவர் தனது 80 வயதான உறவினர் மீது பஞ்சாரா ஹில்ஸில் அமைந்துள்ள அவரது வீட்டில் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி உள்ளார். 

ஃபலக்னுமாவைச் சேர்ந்த அந்த பெண் சமீபத்தில் தனது கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர் தங்குவதற்கு அவரது வயதான உறவினர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். கடந்த வாரம் தன்னுடைய ஆண் நண்பருடன் அந்த முதியவர் வீட்டிற்கு சென்றுள்ளார் பாதிக்கப்பட்ட பெண். பின்னர் அவர்கள் இருவருக்கும் அந்த முதியவர் மதுபானம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த மதுவை அருந்திய பின் குடிபோதையில் இருந்த அந்த பெண்ணை அந்த முதியவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. 
இதையடுத்து அந்தப் பெண் புகார் அளிக்க, தன்னுடைய விலை உயர்ந்த கடிகாரத்தை அந்த பெண்ணும், ஆண் நண்பரும் திருடிவிட்டதாகவும், இது குறித்து கேட்டதால் தன் மீது பொய்ப் புகார் அளித்ததாகவும் முதியவர் போலீசாரிடம் தெரிவித்திருந்தார். மேலும் இந்த சம்பவம் ஏப்ரல் 3 ம் தேதி நடந்த போதிலும், பாதிக்கப்பட்ட பெண் கடந்த வெள்ளிக்கிழமைதான் புகார் அளித்துள்ளார். 

arrested.jpg

மற்றொரு சம்பவத்தில், உத்தரபிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமையன்று 10 வயது சிறுமியை 14 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. ரிந்த் ஆற்றின் அருகே மேய்ச்சலுக்குச் சென்றிருந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர் அவளைப் பிடித்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குற்றம்சாட்டப்பட்ட சிறார் மீது போக்ஸோ சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.