தெலங்கானா ஆளுநராக  8 ஆம் தேதி பதவியேற்கிறார் தமிழிசை!

 

தெலங்கானா ஆளுநராக  8 ஆம் தேதி பதவியேற்கிறார் தமிழிசை!

தெலங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் செப்.8 ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். 

குடியரசு தலைவர் அலுவலகம் கேரளா, தெலங்கானா, இமாச்சல பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு புதிய கவர்னகள் நியமனம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மகாராஷ்ரா மாநில கவர்னராக பகத்சிங் கோஷ்யரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இமாச்சல பிரதேச கவர்னராக இருக்கும் கல்ராஜ் மிஸ்ரா ராஜஸ்தான் மாநில கவர்னராக செல்கிறார் இமாச்சல பிரதேசத்துக்கு புதிய கவர்னராக பண்டாரு தத்தாத்ரேயா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழிசை

தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா கவர்னராக நியமனம் செய்யப்பட்டார். ஆளுநருக்கான நியமன ஆணையை தமிழிசை இன்று மாலை பெற்றுக்கொண்ட நிலையில் வரும் 8 ஆம் தேதி பதவியேற்கிறார்