தெலங்கானாவில் லஞ்சம் கேட்ட பெண் வட்டாட்சியர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த விவசாயி! 

 

தெலங்கானாவில் லஞ்சம் கேட்ட பெண் வட்டாட்சியர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த விவசாயி! 

தெலங்கானாவில் லஞ்சம் கேட்ட பெண் வட்டாட்சியர் விஜயா ரெட்டி ஒரு விவசாயிகள் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானாவில் லஞ்சம் கேட்ட பெண் வட்டாட்சியர் விஜயா ரெட்டி ஒரு விவசாயிகள் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அப்துல்பூரமெட் மாவட்ட நில பத்திரப்பதிவு அலுவலகத்தில் வட்டாச்சியராக பணியாற்றி வந்தவர் விஜயா ரெட்டி. இவரை கடந்த 2 மாதங்களுக்கு முன் சுரேஷ் என்ற விவசாயி  நிலப்பிரச்னை விவகாரம் தொடர்பாக சந்தித்துவிட்டு சென்றார். விவசாயின் நில பிரச்னையை சரி செய்ய விஜயா ரெட்டி லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு சுரேஷ் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். பணம் கொடுக்கவில்லை என்றால் பிரச்னையை சரிசெய்ய முடியாது எனக்கூறி சுரேஷின் விவகாரத்தை கிடப்பில் போட்டுள்ளார் விஜயா ரெட்டி.

Officers

இந்நிலையின் இன்று காலை மீண்டும் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்த சுரேஷ், விஜயா ரெட்டியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் விவசாயி தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேன்னை எடுத்து விஜயா ரெட்டி மீது ஊற்றி தீவைத்துள்ளார். இதில் விஜயா ரெட்டி சம்பவ இடத்திலே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.