தெலங்கானாவில் சந்திரசேகர ராவுக்கு ஆதரவு: பாஜக அறிவிப்பு

 

தெலங்கானாவில் சந்திரசேகர ராவுக்கு ஆதரவு: பாஜக அறிவிப்பு

தெலங்கானாவில் தொங்கு சட்டப்பேரவை அமைந்தால் பாஜக ஆதரவு அளிக்கும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

ஐதராபாத்: தெலங்கானாவில் தொங்கு சட்டப்பேரவை அமைந்தால் பாஜக ஆதரவு அளிக்கும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 11-ம் தேதி நடைபெற இருக்கிறது.. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி (டிஆர்எஸ்) மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.119 தொகுதிகளை கொண்ட அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க 60 உறுப்பினர்கள் தேவை. .

இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதிக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக பாஜக அற்வித்துள்ளது. இதுதொடர்பாக அம்மாநில பாஜக  தலைவர் கே.லட்சுமண் கூறுகையில்,

தெலங்கானாவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் சந்திரசேகர ராவ் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்போம். காங்கிரஸ், எம்.ஐ.எம். ஆகியவைதான் எங்களுக்கு எதிர்க்கட்சிகள். அவர்களை ஆட்சி அமைக்க விடமாட்டோம். இதனால் எங்களது ஆதரவு சந்திரசேகர ராவுக்கு இருக்கும் என்றார்.