தெலங்கானாவிலும் என்னை அக்கா என்று தான் அழைக்கிறார்கள்- தமிழிசை பெருமிதம்
தெலங்கானாவிலும் என்னை அக்கா என்று தான் அழைக்கிறார்கள் என அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவிலும் என்னை அக்கா என்று தான் அழைக்கிறார்கள் என அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் கலந்து கொண்டு பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “நான் தமிழகத்திற்கு என்றும் நன்றி உள்ளவளாக இருப்பேன். என்னை மேதகு ஆளுநர் என்று அழைப்பதை விட பாசமிகு சசோதரி என்று அழைப்பதை தான் நான் அதிகம் விரும்புகிறேன்.
இளம் வயது மருத்துவராக, மருமகளாக பெருமை பட்டேன் தற்போது ஆளுநராக வருவதில் பெருமைப்படுகிறேன். அரசியல் கட்சியில் சேர்ந்துவிட்டால் தானாக டாக்டர் பட்டம் பெற்றுவிடலாம் என மாணவர்கள் நினைக்கிறார்கள். எனது உயரத்தை நிறத்தை, முடியை கிண்டல் செய்தவர்களை இன்று நான் மேடையில் இருந்து கிண்டல் செய்கிறேன். தமிழ் மண்ணுக்கும் தெலுங்கானவிற்கும் பாலமாக இருப்பேன். தெலுகானாவிலும் என்னை அக்கா என்று தான் அழைக்கிறார்கள்” என்று கூறினார்.