‘தெறி’ ரீமேக்கில் இணைந்த ஸ்ருதிஹாசன்
வில்லனாக மறைந்த பழம்பெரும் இயக்குநர் மகேந்திரன் நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றியே மெர்சல், பிகில் திரைப்படங்கள் உருவாக அடித்தளமாக அமைந்தது.
‘தெறி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் ‘தெறி’. அட்லீ இயக்கத்தில் உருவான இப்படத்தில் எமி ஜாக்சன், சமந்தா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த இத்திரைப்படத்தில் வில்லனாக மறைந்த பழம்பெரும் இயக்குநர் மகேந்திரன் நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றியே மெர்சல், பிகில் திரைப்படங்கள் உருவாக அடித்தளமாக அமைந்தது.
இதையடுத்து தெறி திரைப்படம் தெலுங்கில் ரீமேக்காக இருக்கிறது என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. இப்படத்தை இயக்குநர் கோபிசந்த் மாலினேனி இயக்க, விஜய் கதாபாத்திரத்தில் ரவி தேஜா நடித்து வருகிறார்.
Welcoming ..the multi talented actress @shrutihaasan on board ??? #RT66 pic.twitter.com/Coym47HUDF
— Gopichand Malineni (@megopichand) October 30, 2019
இந்நிலையில் இப்படத்தில் நடிக்க நடிகை ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் எமி ஜாக்ஷன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்தது வருவது குறிப்பிடத்தக்கது.