“தெய்வமே.. இது என்ன விடாம துரத்திக்கிட்டே இருக்கு”.. ட்ரோன் கேமராவை பார்த்து இளைஞர்கள் தெறித்து ஓடும் அடுத்த வீடியோ!
ஊரடங்கை மீறி சுற்றித்திரிபவர்களை கண்காணிக்கவும் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப் படுகின்றன.
கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருவதால், மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன் இருப்பவர்கள் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். அவர்கள் வெளியே வர கூடாது என்றும் அவர்களுக்கு தேவையான பொருட்கள் அந்த இடத்திற்கு கொண்டு தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் வெளியே வருகிறார்களா என்பதை கண்காணிக்கவும் ஊரடங்கை மீறி சுற்றித்திரிபவர்களை கண்காணிக்கவும் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப் படுகின்றன.
“தெய்வமே.. இது என்ன விடாம துரத்திக்கிட்டே இருக்கு”.. ட்ரோன் கேமராவை பார்த்து இளைஞர்கள் தெறித்து ஓடும் அடுத்த வீடியோ!#selam #coronavirus #coronavirusindia #Quarantine #police #dronecamera #selampolice pic.twitter.com/QrIACWCFLR
— Top Tamil News (@toptamilnews) April 17, 2020
இரண்டு நாட்களுக்கு முன்னர், திருப்பூர் போலீசார் சினிமா ஆர்வலர்கள் துணையோடு ட்ரோனை பறக்க விட்ட வீடியோ காட்சி சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டிங் ஆனது. அந்த வீடியோ, ட்ரோன் கேமரா எப்படி செயல்படும் என்பதை எடுத்துரைக்கும் வகையில் சிறிது நகைச்சுவையோடு உருவாக்கப்பட்டிருந்தது. அதே போல, தற்போது சேலம் போலீசார் தயாரித்திருக்கும் புது காணொளி வெளியிடப்பட்டுள்ளது.