தெய்வமகள் சீரியல் அண்ணியாருக்கு என்ன ஆச்சு?

 

தெய்வமகள் சீரியல் அண்ணியாருக்கு என்ன ஆச்சு?

தெய்வமகள் சீரியல் வில்லி நடிகை காயத்ரி தன் ரசிகர்களை விரைவில் சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்

சென்னை: தெய்வமகள் சீரியல் வில்லி நடிகை காயத்ரி தன் ரசிகர்களை விரைவில் சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை காயத்ரி.தெய்வமகள் சீரியலில் நடித்த அனைவருக்குமே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதிலும் குறிப்பாக கதாநாயகியாக நடித்த வாணி போஜனும், வில்லியாக நடித்த காயத்ரியும் மிகவும் பிரபலமானார்கள். தெய்வமகள் சீரியல் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் சன் டீவியில் ஒளிபரப்பான நந்தினி தொடரில் மந்திரவாதியாக நடித்தார் காயத்ரி. 

deivamagal anniyar

இந்நிலையில் நந்தினி சீரியல் முடிவடைந்ததை அடுத்து காயத்ரி சீரியல் நடிக்காததால் அவருக்கு என்ன ஆயிற்று என்ற கேள்வி அவர்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தன. அதற்கு பதிலளிக்கும் விதமாக,’குடும்பத்தைப் பிரிந்ததாக தோன்றியது எனவே குடும்பத்துடன் பெங்களூரில் நேரம் கழித்து வருகிறேன், விரைவில் என்னை சீரியலில் நீங்கள் பார்க்கலாம்.  ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம்’ என கூறியுள்ளார்.