தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்

 

தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்

தென் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெப்பம் வாட்டி வதைக்கிறது. இந்த நிலையில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இதனால் வெப்பநிலை சற்று குறைவாக இருக்கும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

representative image

மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களிலும் மற்றும் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும். மதுரை, திருச்சி, கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியஸ் என்ற அளவில் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொது மக்கள் வெளியே செல்வதையும், விவசாயிகள், தொழிலாளர்கள் வெயிலில் வேலை செய்வதையும் தவிர்க்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரக்கைவிடுத்துள்ளது.