தென் கொரியாவில் குணமடைந்த 91 பேருக்கு மீண்டும் கொரோனா!
கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதுவரை உலகம் முழுவதும் 17லட்சத்து 14ஆயிரத்து 733 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், தென் கொரியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த 91 பேருக்கு மீண்டும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுக்கு புதிதாக நோய்த் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லை; உடலில் செயலிழந்த வைரஸ் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.