தென்னிந்திய படங்களில் நடிப்பிங்களா?… என்ற கேள்விக்கு தீபிகா படுகோனேவின் அசத்தல் பதில்

 

தென்னிந்திய படங்களில் நடிப்பிங்களா?… என்ற கேள்விக்கு தீபிகா படுகோனேவின் அசத்தல் பதில்

பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே, கன்னடத்தில் தான் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார் என்பது பலருக்குத் தெரியாது. ஆம், தீபிகா முதன் முதலில் நடித்தது ஐஸ்வர்யா என்ற கன்னட படத்தில் தான். ஒரு சிறிய திரைதுறைப் பகுதியில் தன்  பயணத்தை தொடங்கிய தீபிகா இன்று ஹாலிவுட் வரையில் சென்றிருக்கிறார் என்றால் அவரது கடின உழைப்பே அதற்குக் காரணம் என்று கூறலாம்.

 

பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே, கன்னடத்தில் தான் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார் என்பது பலருக்குத் தெரியாது. ஆம், தீபிகா முதன் முதலில் நடித்தது ஐஸ்வர்யா என்ற கன்னட படத்தில் தான். ஒரு சிறிய திரைதுறைப் பகுதியில் தன்  பயணத்தை தொடங்கிய தீபிகா இன்று ஹாலிவுட் வரையில் சென்றிருக்கிறார் என்றால் அவரது கடின உழைப்பே அதற்குக் காரணம் என்று கூறலாம்.

aishwarya-kannada-movie

சமீபத்தில் ஒரு நேர்காணலில், நீங்கள் தென்னிந்திய படங்களில் மீண்டும் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் அனைவரையும் கவர்ந்துள்ளது. 

“கண்டிப்பாக நடிப்பேன், மொழி ஒரு தடையே கிடையாது. ஒவ்வொரு நாள் முடிவிலும் சிறந்த கதையம்சம் கொண்ட கதைகளில் நடிக்கிறேனா? என்று தான் யோசிப்பேன். உண்மையில் தென்னிந்திய இயக்குனர்கள் பலர் என்னை அணுகினர், இறுதியாக நல்ல கதை உள்ள படமாக இருந்தால் நடிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன்” என்றார்.

83-movie

பல படங்களை கைவசம் வைத்திருக்கும் தீபிகா தற்போது காபிர் கான் இயக்கத்தில் 83 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரன்வீர் கபூர் கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது மனைவி ரெமி தேவாக தீபிகா தன் கணவருடன் நடிக்கிறார். அடுத்து மஹாபாரத கதையை திரௌபதி கண்ணோட்டத்தில் எடுக்கப்படும் ஒரு படத்தில் நடிக்கயிருப்பதாக அறிவித்துள்ளார்.