தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் தொடர்ந்து இயக்கம் – எப்போதும்போல வேலை செய்யும் தொழிலாளர்கள்

 

தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் தொடர்ந்து இயக்கம் – எப்போதும்போல வேலை செய்யும் தொழிலாளர்கள்

பிரதமரின் ஊரடங்கை கடைபிடிக்காமல் தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் தொடர்ந்து இயக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி: பிரதமரின் ஊரடங்கை கடைபிடிக்காமல் தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் தொடர்ந்து இயக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி அண்மையில் அழைப்பு விடுத்தார். அதையடுத்து இன்று பிரதமர் மோடியின் அழைப்புக்கு பணிந்த இந்திய மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றனர். இதனால் நாட்டின் தேசிய சாலைகள், நகர சாலைகள், கிராம தெருக்கள் உட்பட அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. கடைகளும் விடுமுறை அறிவித்து விட்டன.

ttn

பொதுமக்கள் கூடும் இடங்கள் அனைத்திலும் பறவைகள், பூச்சிகளை தவிர யாரும் இல்லை. இதனால் தேசமே முடங்கியுள்ளது. இந்த நிலையில், பிரதமரின் ஊரடங்கை கடைபிடிக்காமல் தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் தொடர்ந்து இயக்கப்படுவதாகவும், அங்கு தொழிலாளர்கள் பணிபுரிந்தும் வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் விடுமுறை அறிவித்தும் தொழிற்சாலை இயக்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.