தூத்துக்குடி மாவட்டத்துக்கு தனி செயலியா?! : அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம்.

 

தூத்துக்குடி மாவட்டத்துக்கு தனி செயலியா?! : அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம்.

தூத்துக்குடி மாவட்டத்துக்கென்றே தனியாக, ” முத்து மாவட்டம்” என்ற செயலி உருவாக்கப் பட்டுள்ளது. இதனை, அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைத்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக இணையதளம் என்பது மக்களின் வாழ்வாதாரமாக மாறிவிட்டது. ஸ்மார்ட் போன்கள் வந்ததில் இருந்து இணையதளத்தில் நிறைய செயலிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன .. விளையாட்டு, தேர்வுகள், கேம்ஸ், கிரிக்கெட், மருத்துவம், உள்ளிட்ட அனைத்து தகவல்களுக்கும் செயலி உருவாக்கப் பட்டுள்ளது. ஆனால் ஒரு மாவட்டத்துக்கென்று புது செயலியை உருவாக்கியது இதுவே முதன்முறையாகும். 

Minister Kadambur raju

தூத்துக்குடி மாவட்டத்துக்கென்றே தனியாக, ” முத்து மாவட்டம்” என்ற செயலி உருவாக்கப் பட்டுள்ளது. இதனை, அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், முத்து மாவட்டம் என்ற இந்த செயலி மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை சார்பில் நடக்கும் திட்டப் பணிகளையும்  என்னென்ன திட்டங்கள் அம்மாவட்டத்தில் உள்ளது என்பதையும் மக்கள் எளிதாக அறிந்து கொள்ளாலாம் என்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.