தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: வழக்கை ஒத்தி வைத்த மதுரை உயர் நீதி மன்றம்…
Sep 20, 2019, 16:39 IST1568977745000
அறிக்கையை முழுமையாக படித்து தீர்ப்பு கொடுக்க மதுரை உயர் நீதி மன்றம் ஒரு வார கால அவகாசம் கேட்டு வழக்கை ஒத்திவைத்தது.
கடந்த மே மாதம் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலககத்தை முற்றுகையிட்டு ஆயிரக் கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். போராட்டத்தை கட்டுப் படுத்த காவல் துறை துப்பாக்கி சூடு நடத்தியது.
அதில் 13 பேர் மேல் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.இதனையடுத்து, இச்சம்பவம் குறித்த அனைத்து தகவல்களையும் ஒரே அறிக்கையாக தாக்கல் செய்யும் படி உயர் நீதி மன்ற மதுரை கிளை, சி.பி.ஐ க்கு உத்தரவிட்டது.
அதன் படி, இன்று மதுரை உயர்நீதி மன்ற கிளையில் சி.பி.ஐ சீலிட்ட கவரில் 2 அறிக்கைகள் தாக்கல் செய்தது. அறிக்கையை முழுமையாக படித்து தீர்ப்பு கொடுக்க மதுரை உயர் நீதி மன்றம் ஒரு வார கால அவகாசம் கேட்டு வழக்கை ஒத்திவைத்தது.