தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : நேரில் ஆஜராக ரஜினிகாந்துக்கு சம்மன் !

 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : நேரில் ஆஜராக ரஜினிகாந்துக்கு சம்மன் !

நடிகர் ரஜினிகாந்த்தும் தூத்துக்குடி சென்று, துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட்  ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு போராட்டம் இன்னும் வலுப்பெற்றதால், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பலரும் ஆறுதல் தெரிவித்தனர். அதே போல நடிகர் ரஜினிகாந்த்தும் தூத்துக்குடி சென்று, துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ‘தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துள்ளனர்’ என்று கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

ttn

இந்த வழக்கு விசாரணையை  அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ரஜினி கூறியது பற்றிப் பேசிய வழக்கறிஞர் வடிவேல் முருகன், ரஜினி  துப்பாக்கிச் சூட்டின் போது சில குறியீடுகளைப் பற்றிப் பேசியதாக இங்கு ஆஜரான சாட்சிகள் தெரிவித்துள்ளன. அதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளது. அதனால் அவர் நேரில் அழைத்து விசாரிக்கப் படுவார் என்று தெரிவித்தார். அதன் படி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்  குறித்து விளக்கம் அளிக்க வரும் 25 ஆம் தேதி நேரில் ஆஜராகும் படி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் ரஜினிகாந்த்துக்குச் சம்மன் அனுப்பியுள்ளது.