தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு பணி

 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு பணி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட 19 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதல்வர் பழனிசாமி இன்று வழங்கினார்.

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட 19 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதல்வர் பழனிசாமி இன்று வழங்கினார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாகஉயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையுமே உலுக்கியது. மேலும் தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ 20 லட்சம் நிவாரண உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அவரவர் தகுதிக்கேற்ப அரசு பணியும் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கனவே இழப்பீட்டு தொகையாக தலா ரூ 20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் பலியான குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர், காயமடைந்ததால் ஊனமுற்ற 9 பேர் உட்பட மொத்தம் 19 பேருக்கு அரசுப்பணிக்கான பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.