தூத்துக்குடியில் மனைவி, மகன் கண்முன்னே பயங்கரம்! பிரபல ரவுடி வீடு புகுந்து வெட்டிக்கொலை!!
தூத்துக்குடியில் மனைவி, மகன் கண்முன்னே பிரபல ரவுடி ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் மனைவி, மகன் கண்முன்னே பிரபல ரவுடி ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி கேவிகே நகரைச் சேர்ந்தவர் சிந்தா சரவணன். இவர கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கார்த்திகா. இவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். சிந்தா சரவணன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக, தூத்துக்குடியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பட்டு என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து சரவணன் ஜாமீனில் வெளியே வந்தார். இதுதொடர்பான வழக்கு தூத்துக்குடி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி கே.வி. கே. நகரில் வீட்டிலிருந்த சிந்தா சரவணனை இன்று மாலை 4.30 மணி அளவில் ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்தது. இதில் நிலைகுலைந்த சரவணன் ரத்தவெள்ளத்தில் பலியானார்.
தகவலறிந்த தூத்துக்குடி தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.தொடர்ந்து கைரேகை நிபுணர்களும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. அப்போது வீட்டுக்குள் கொலையாளிகளுள் ஒருவன் விட்டுச்சென்ற ஏ.டி.எம்.கார்டு கிடந்தது. அதை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். போலீசாரின் விசாரணையில் அந்த ஏ.டி.எம்.கார்டு மகாராஜன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. மேலும் மகாராஜன் உள்பட 5 பேர் சேர்ந்தே சிந்தா சரவணனை வெட்டிப்படுக்கொலை செய்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.